கட்டிடம் ஒன்றில் வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
கட்டிடம் ஒன்றில் வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

கிளிநொச்சி - விசுவமடு பகுதியில் உள்ள இலங்கை வங்கி காரியாலய கட்டிடத்தின் மேல் தளத்தில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார். 

அவரது அருகில் பிலேட் ஒன்றும் கையடக்கதொலைபோசி ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், அவரது பணப்பையில் ஒரு தொகைபணமும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் மக்களின் உதவியுடன் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 

அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் கணேசன் விஜிதரன் வயது 30 என அவரது சாரதி அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் பூர்வாங்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு