போதை மாத்திரை விற்பனையுடன் மேலும் சில மருத்துவர்கள், பார்மசிகளுக்கு தொடர்பு! வைத்தியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்பலம்..

ஆசிரியர் - Editor I
போதை மாத்திரை விற்பனையுடன் மேலும் சில மருத்துவர்கள், பார்மசிகளுக்கு தொடர்பு! வைத்தியரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்பலம்..

வவுனியாவில் உள்ள பல மருந்துகளுக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை விற்பனையுடன் தொடர்புள்ளமை தொியவந்துள்ளதுடன், சில மருந்தகங்கள் ஏற்கனவே சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணத்தில் உள்ள மொத்த தனியார் மருந்துகள் விற்பனை செய்யும் நிலையத்திலிருந்து வவுனியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பெருமளவு உயிர்கொல்லி போதை மாத்திரைகள் கொள்வனவு செய்தமை அம்பலமாகியிருந்தது. 

இதனை தொடர்ந்து மருத்துவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதன்போது வவுனியாவில் உள்ள வேறு சில மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்தமை தொியவந்துள்ளது. 

அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு