யாழ்.இணுவில் - கலாஜோதி பகுதியில் 17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு! உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பியபோது சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவில் - கலாஜோதி பகுதியில் 17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு! உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பியபோது சம்பவம்..

யாழ்.இணுவில் - கலாஜோதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்று மாலை 3.30 மணியளவில் 17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

தாக்குதலில் காயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

உரும்பிராய் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் பாடசாலையிலிருந்து இடைவிலகிய நிலையில் அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகின்றான். 

இந்நிலையில் நேற்றைய தினம் இணுவில் - கலாஜோதி விளையாட்டு மைதானத்தின் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும்போது தாக்கதல் நடத்தப்பட்டது. 

தெல்லிப்பழையிலிருந்து 2 மோட்டார் சைக்கிளில் சென்ற வாள்வெட்டு குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தொிவித்துள்ளனர். 

வாள்வெட்டு தாக்குதலில் தலை, கை ஆகியவற்றில் காயமடைந்த நிலையில் சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு