கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம்! திருமணமாகி ஒரு மாதமேயான இளம் குடும்பஸ்த்தர் பலியான சோகம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம்! திருமணமாகி ஒரு மாதமேயான இளம் குடும்பஸ்த்தர் பலியான சோகம்..

கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 வயதான இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் கொக்கட்டிச்சோலை - மணல்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் சண்முகம் வினோராஜ் வயது 31 என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார். சம்பவ தினத்தன்று தனது தாயாரின் வீடான பண்டாரியவெளி பிரதேசத்திலிருந்து 

தனது வீட்டுக்கு தனது உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டுள்ளது.

குறித்த நபர் கடந்த மாதம் திருமணமானவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு