சொந்த வீட்டிலேயே பொருட்களை திருடி விற்பனை செய்து போதைப் பொருள் வாங்கும் நபர் ஹெரோயினுடன் கைது! யாழ்.அச்சுவேலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சொந்த வீட்டிலேயே பொருட்களை திருடி விற்பனை செய்து போதைப் பொருள் வாங்கும் நபர் ஹெரோயினுடன் கைது! யாழ்.அச்சுவேலியில் சம்பவம்..

யாழ்.அச்சுவேலி - பத்தமேனி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தர் என அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த நபர் ஏற்கனவே ஹெரோயின் போதை பொருள் மற்றும் கஞ்சா போதை பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டில் உள்ள பொருட்களை விற்று, போதைப்பொருள் வாங்கும் பழக்கத்தினை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

என பொலிசார் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின், தேசிக்காய், மற்றும் சிறின்ஸ் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு