யாழ்.ஊரெழு - பொக்கணை பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு! இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழு - பொக்கணை பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு! இருவர் கைது..

யாழ்.ஊரெழு - பொக்கணை பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தை இன்று அதிகாலை 1 மணியளவில் முற்றுகையிட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

மேலும் சுமார் 200 லீற்றர் கோடா, 60லீற்றர் ஸ்பிரிட் மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 1மணியளவில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது.

யாழ்.பொலிஸ் பிராந்தித்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உதித் லியனகேயின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருட்கள், கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு