யாழ்.ஆவரங்காலில் வீதியில் சென்றுகொண்டிருந்த நபரை வழிமறித்த முகமூடி கொள்ளையர்கள்! வாளை காட்டி அச்சுறுத்தி கொள்ளை..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆவரங்காலில் வீதியில் சென்றுகொண்டிருந்த நபரை வழிமறித்த முகமூடி கொள்ளையர்கள்! வாளை காட்டி அச்சுறுத்தி கொள்ளை..

யாழ். அச்சுவேலி - ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் சென்ற நபர் ஒருவரிடம் முகமூடி அணிந்து வாள் மற்றும் கத்தியுடன் வந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் உடமையில் இருந்த ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு 7மணியளவில் ஆவரங்கால் - வன்னியசிங்கம் வீதியால் பயணித்த நபரிடம் மோட்டார் வண்டியில் முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி 15000 ரூபா வரையான பணம் உட்பட உடைமையில் வைத்திருந்த ஆவணங்களையும் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவில் வல்லைவெளி உட்பட பல்வேறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு