நவாலி மற்றும் கனகராயன்குளம் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை! மானிப்பாயில் பதுங்கியிருந்த 4 கொள்ளையர்களை மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
நவாலி மற்றும் கனகராயன்குளம் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை! மானிப்பாயில் பதுங்கியிருந்த 4 கொள்ளையர்களை மடக்கியது பொலிஸ்..

இருவேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்படைய 4 சந்தேகநபர்கள் மானிப்பாய் பகுதியில் பதுக்கியிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைதான நபர்கள் போதை அடிமைகள் எனவும் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். 

நேற்றைய தினம் இந்த கைது இடம்பெற்றிருக்கின்றது. கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றுமுன்தினம் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த இருவரை தாக்கிவிட்டு சுமார் 3 பவுண் நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. 

மேலும் இதேகுழு நவாலி- வழுக்கையாறு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கணவன், மனைவியை தாக்கி 3 பவுண் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றது. 

மேற்படி குழு நவாலியில் பதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்தை முற்றுகையிட்ட 4 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு