இலங்கையை நெருங்கும் சூறாவளி! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கையை நெருங்கும் சூறாவளி! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் வலுவடைந்துவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

நாளைய தினம் மேலும் வலுவடையும் சாத்தியங்கள உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. 

மேலும் இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 ஆம் திகதி சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை, 2022 அக்டோபர் 20 ஆம் திகதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் 

மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வும்வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இது 22ஆம் இன்று மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு