இளம் பெண்களின் தொலைபேசிகளை இலக்குவைத்து திருடும் கும்பலை சேர்ந்த ஒருவர் யாழ்.சுன்னாகத்தில் கைது! தொலைபேசிகளும் மீட்பு..

ஆசிரியர் - Editor I
இளம் பெண்களின் தொலைபேசிகளை இலக்குவைத்து திருடும் கும்பலை சேர்ந்த ஒருவர் யாழ்.சுன்னாகத்தில் கைது! தொலைபேசிகளும் மீட்பு..

பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை திருடிவந்த கும்பலை சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 9 கைத்தொலைபேசிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். 

சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம், பலாலி உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை சந்தேக நபர் அபகரித்துள்ளார். 

குறித்த விடயம் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. யாழ்.மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸின் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 

தொலைபேசிகளை தவறவிட்ட பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை வழங்கியவர்கள் அலைபேசியை அடையாளம் காட்டுமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு