யாழ்.மூளாயில் வீடு உடைத்து கொள்ளை! திருடிய பொருட்களுடன் சந்தேகநபரை மடக்கிய பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மூளாயில் வீடு உடைத்து கொள்ளை! திருடிய பொருட்களுடன் சந்தேகநபரை மடக்கிய பொலிஸார்..

யாழ்.மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து இலத்திரனியல் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்றுமுன்தினம் 19ம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரை திருடப்பட்ட இலத்திரனியல் சாதனங்களுடன் நேற்று கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் உள்ளவர்கள், மட்டக்களப்பில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு சென்று வீடு திரும்பி பார்த்தபோத குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை வீட்டாருக்கு தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு