யாழ்.ஆறுகால்மடத்தில் கடையொன்றின் மீது தாக்குதல் நடத்திய நபர் தப்பி ஓட்டம்! பொலிஸார் விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆறுகால்மடத்தில் கடையொன்றின் மீது தாக்குதல் நடத்திய நபர் தப்பி ஓட்டம்! பொலிஸார் விசாரணை..

யாழ்.ஆறுகால்மடம் - லோட்டஸ் வீதியில் உள்ள கடையொன்றுக்குள் நுழைந்த இனந்தொியாத நபர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றார். 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

முச்சக்கர வண்டி உதிரப்பாக கடையொன்றின் கதவுகளை கொத்திய நபர் கடைக்குள் புகுந்து அங்கிருந்த உதிரிபாகங்களையும் அடித்து நொருக்கியதுடன், 

கடைக்கும் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் பொலிசாருக்கு முறையிட்ட நிலையில் 

சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு