பொதுமக்களை பீதி கொள்ளவைக்கும் யாழ்.வல்லைவெளி வழிப்பறி கொள்ளையர்கள்! பொலிஸார் உறக்கம், நேற்றும் 5 பவுண் தாலி அறுப்பு..

ஆசிரியர் - Editor I
பொதுமக்களை பீதி கொள்ளவைக்கும் யாழ்.வல்லைவெளி வழிப்பறி கொள்ளையர்கள்! பொலிஸார் உறக்கம், நேற்றும் 5 பவுண் தாலி அறுப்பு..

யாழ்.வல்லைவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த பெண்ணின் தாலிக் கொடி வழிப்பறிக் கொள்ளையர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள்,

வல்லைவெளி பகுதியில் 5 பவுண் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் குறித்த பெண் பயணித்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறு விபத்துக்குள்ளானது. 

இதனால் படுகாயமடைந்த பெண் உள்ளிட்ட இருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

வல்லைவெளி பகுதியில் தொடர்ச்சியாக ஒரு வாரத்தில் மட்டும் 5ற்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு