தனது துவிச்சக்கர வண்டியை கோவிலில் நிறுத்திவிட்டு கோவிலில் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியை திருடி விற்பனை செய்த முதியவர் கைது!

ஆசிரியர் - Editor I
தனது துவிச்சக்கர வண்டியை கோவிலில் நிறுத்திவிட்டு கோவிலில் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியை திருடி விற்பனை செய்த முதியவர் கைது!

நல்லுார் - சட்டநாதர் கோவிலுக்க வந்திருந்த பக்தர் ஒருவருடைய துவிச்சக்கர வண்டியை திருடிய வயோதிபர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

அன்றைய தினம் புரட்டாசி சனியை ஒட்டி பெருமளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வந்திருந்தனர். இந்நிலையில் அங்குவந்த முதியவர் தனது துவிச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு பக்தர் ஒருவருடைய துவிச்சக்கர வண்டியை திருடிச் சென்றுள்ளார். 

இந்த விடயம் அப்பகுதியிலிருந்த சீ.சி.ரீ.வி கமராக்களின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருடிச் சென்றிருந்த துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்துவிட்டு தனது துவிச்சக்கர வண்டியை எடுப்பதற்காக மீண்டும் கோவிலுக்கு வந்திருந்த நிலையில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு