யாழ்.பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிளை திருடி பெண்ணின் சங்கிலி அறுத்த இருவர் 5.5 பவுண் நகையுடன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிளை திருடி பெண்ணின் சங்கிலி அறுத்த இருவர் 5.5 பவுண் நகையுடன் கைது!

யாழ்.பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிளை திருடி வீதியால் பிள்ளையுடன் பயணித்த பெண்ணின் சங்கிலியை அறுத்த நபர் உட்பட இருவர் 5.5 பவுண் தங்க நகையுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த நபர்கள் பெறுமதியான கைத் தொலைபேசி ஒன்றையும் திருடிச் சென்றிருந்த நிலையல் அது குறித்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக பருத்தித்துறை பொலிஸார் தொிவித்துள்ளனர். 

மேலும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான பொலிஸ் குழு அதிகாலையில் நடத்திய ரோந்து நடவடிக்கையின்போது, 

மாடு ஒன்றை திருடிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் நகைத் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு வேறு பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் 

அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு