விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் குறித்த மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் இருந்து பயணித்த இரண்டரை வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மன்னார் - அகத்திமுறிப்பு பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அம்ஜட் பாத்திமா அமனா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. தனது தந்தையின் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் குழந்தை அமர்ந்திருந்த நிலையில், தற்செயலாக தளம்பிய மோட்டார் சைக்கிள் 

வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பட்டா வாகனம மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் மயக்கமடைந்த குழந்தை மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தது. எனினும் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு