யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளோருக்கு மகிழ்ச்சியான செய்தி! 3 நாட்கள் நேர்முகத் தேர்வு..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளோருக்கு மகிழ்ச்சியான செய்தி! 3 நாட்கள் நேர்முகத் தேர்வு..

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழிகாட்டலில் யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான முதலாம் கட்ட நேர்முகத்தேர்வு நடத்தப்படவுள்ளது. 

மேற்படி நேர்முகத்தேர்வு எதிர்வரும் 17ஆம், 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தென்மராட்சிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் குறித்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதுடன் வரும்போது தொழில் தகைமைச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களுடன் சமுகமளிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு