யாழ்.வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளை, வழிப்பறி சம்பவங்களுடன் தொடர்புடைய 23 வயதான நபர் ஹெரோயின் மற்றும் தங்கத்துடன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற பல கொள்ளை, வழிப்பறி சம்பவங்களுடன் தொடர்புடைய 23 வயதான நபர் ஹெரோயின் மற்றும் தங்கத்துடன் கைது!

யாழ்.வடமராட்சி பகுதியில் வீடு ஒன்றனை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதுடன் வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின்போது, நேற்று அல்வாய் பகுதியில் வைத்து 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஐ போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபரின் உடமையிலிருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றயவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு