வடமாகாணத்தில் நாளைவரை கனமழை தொடரும்! புதிய தாழமுக்கம் சில நட்களில், யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் நாளைவரை கனமழை தொடரும்! புதிய தாழமுக்கம் சில நட்களில், யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

வடமாகாணத்தில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நாளை வரையில் நீடிக்கும். என யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 14.10.2022 வெள்ளிக்கிழமை இந்த வருடத்திற்கான இரண்டாவது இடைப்பருவம் தொடங்குகின்றது. 

ஆனால் இவ்வாண்டு இரண்டாவது இடைப்பருவம் குறுகிய காலப் பகுதியைக் கொண்டதாகவே அமையும். 

ஆனால் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காலநிலைப் பருவங்கள் பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. 

இரண்டாவது இடைப்பருவம் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

குறிப்பாக முதல்(14.10.2022) நாளை மறுதினம் (16.10.2022) வரை வடமாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

அதே சமயம் எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. 

வடமாகாண விவசாயிகள் அடுத்துவரும் சில தினங்கள் கழித்து தங்களது பெரும்போக விதைப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். 

என அவர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு