யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலக பெண் ஊழியரிடம் கத்தி முனையில் வழிப்பறி! வழிமறித்து துணிகர கொள்ளை..

ஆசிரியர் - Editor I
யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலக பெண் ஊழியரிடம் கத்தி முனையில் வழிப்பறி! வழிமறித்து துணிகர கொள்ளை..

யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகஸ்த்தரிடம் கத்தி முனையில் வழிப்பறிக் கொள்ளை இடம்பெற்றள்ளது. 

அபிவிருத்தி உத்தியோகஸ்தரான குறித்த பெண் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை பிரதேச செயலக பணி முடித்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, 

வீதியில் நின்ற வழிப்பறி கொள்ளையர்கள் ,குறித்த பெண்ணை மறித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த நகையையும் கைப்பையையும் அபகரித்து சென்றுள்ளனர்.

கைப்பையினுள் ஒரு தொகை பணம், ஆவணங்கள் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு