யாழ்.கோப்பாய் - ஊரெழு பகுதிகளில் பொலிஸார் அதிரடி முற்றுகை! போதை மாத்திரைகள், ஹெரோயின் போன்றவற்றுடன் 5 பேர் சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் - ஊரெழு பகுதிகளில் பொலிஸார் அதிரடி முற்றுகை! போதை மாத்திரைகள், ஹெரோயின் போன்றவற்றுடன் 5 பேர் சிக்கினர்..

யாழ்.கோப்பாய் - செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய பகுதிகளில் நேற்று பொலிஸார் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோப்பாய் பொலிஸ் நிலையப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது. செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய பகுதிகளில் ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் 

வியாபாரிகள் இருவர் உட்பட ஐந்து பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு கோப்பாய் பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு