யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவருடைய சடலம் மீட்பு! தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவருடைய சடலம் மீட்பு! தீவிர விசாரணையில் பொலிஸார்..

யாழ்.போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

அவரது உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று காலை சம்பவ இடத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன என்று பொலிஸார் கூறினர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த 32 வயதுடைய கட்டடப் பணியாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேர் பொலிஸ் விசாரணையில் உள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு