ஆபாச காணொளிகளை காண்பித்து 7 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது! யாழ்.சாவகச்சோியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
ஆபாச காணொளிகளை காண்பித்து 7 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது! யாழ்.சாவகச்சோியில் சம்பவம்..

ஆபாச காணொளிகளை காண்பித்து 7 வயது மகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 30 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் யாழ்.சாவகச்சோி பகுதியில் இடம்பெற்றுள்ளது, தனது 7 வயதான மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து, 

மது போதையில் மகளை வன்புணர்ந்தார் என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பாட்டியினால் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளதுடன், 

சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு