கொடுப்பனவை நிறுத்தியதாக கூறி அரச ஊழியர் மீது அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
கொடுப்பனவை நிறுத்தியதாக கூறி அரச ஊழியர் மீது அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்..!

சமுர்த்தி உத்தியோகஸ்த்தரின் காரியாலயத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் வவுனியா - கந்தபுரம் பகுதியில் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்தபுரம் பிரிவில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் அவரது காரியாலயத்தில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது 

அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர் தனது சமுர்த்தி கொடுப்பனவை நீக்கியதாக கூறி முரண்பட்டதுடன் குறித்த உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான சமுர்த்தி உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வைத்தியசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு