யாழ்.தாவடியில் ஹெரோயின் வியாபாரி கைது, திருத்தி தாருங்கள் என பொலிஸாரிடம் மன்றாடிய தாய்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடியில் ஹெரோயின் வியாபாரி கைது, திருத்தி தாருங்கள் என பொலிஸாரிடம் மன்றாடிய தாய்..

யாழ்.தாவடி பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருத்திக் கொடுக்குமாறு குறித்த இளைஞனின் தாயார் பொலிஸாரிடம் மன்றாட்டமாக கோரியுள்ளார். 

யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹேரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனின் தாயார் இவரை திருத்தி தருமாறு

பொலிசாரிடம் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளார். 28 வயதான இளைஞன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளுடன் நீண்ட காலமாக தொடர்பை பேணி வந்துள்ளதோடு 

இதனை பிரதான தொழிலாக கொண்டு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு