யாழ்.அராலியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் நாவாந்துறையில் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.அராலியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் நாவாந்துறையில் மீட்பு!

யாழ்.அராலியில் வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட நிலையில் நாவாந்துறை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அது மீட்கப்பட்டுள்ளது. 

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த 3ம் திகதி திருடிச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் நாவாந்துறை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டுள்ளது. 

எனினும் திருட்டுடன் தொடர்புடைய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு