தாமரை இலை பிடுங்குவதற்கு முயற்சித்த பெண் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
தாமரை இலை பிடுங்குவதற்கு முயற்சித்த பெண் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

தாமரை இலை பறிப்பதற்காக சென்றிருந்த பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் வவுனியா மாமடுவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை அவாதனித்த சிலர் சம்பவம் தொடர்பாக மாமடு பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன் உடற் கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

சம்பவத்தில் சேர்ந்த சந்திரலதா வயது 49 என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு