யாழ்.தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் மின்னல் தாக்கியதில் 34 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். 

இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் தேட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவினை கொண்டு சென்றவேளை 

தோட்ட பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.தெல்லிப்பளை காங்கேசன்துறை பகுதிகளில் 

இன்றைய தினம் வியாழக்கிழமை காலை திடீரென கடும் மழை இடி மின்னலுடன் பெய்திருந்தது. இதன்போது மின்னல் தாக்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு