ஓடு பிரித்து வீட்டுக்குள் நுழைந்து துணிகர கொள்ளை! வீட்டில் இருந்தவர்களுக்கு காலையில் எழுந்த பின்பே கொள்ளை நடந்தது தொியுமாம்..

ஆசிரியர் - Editor I
ஓடு பிரித்து வீட்டுக்குள் நுழைந்து துணிகர கொள்ளை! வீட்டில் இருந்தவர்களுக்கு காலையில் எழுந்த பின்பே கொள்ளை நடந்தது தொியுமாம்..

கிளிநொச்சி - கல்மடுநகர் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று நள்ளிரவு ஓடு பிரித்து உள்நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 5 பவுண் நகை மற்றும் 49 ஆயிரத்து 50 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளது. 

அத்துடன் பெறுமதிமிக்க இரண்டு தொலைபோசிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருளையும் களவாடிச் சென்றுள்ளனர். இதன்போது வீட்டில் இருந்தவர்களுக்கோ மற்றைய பொருட்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை. 

வீட்டிலிருந்தவர்கள் இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோதே திருட்டு சம்வம் இடம்பெற்றமை தெரியவந்துள்ளது. பின்னர் இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 

இச்சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் துரித விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு