இ.போ.ச பருத்தித்துறை சாலை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்ப போராட்டத்தில் குதிக்க தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பருத்தித்துறை சாலை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்ப போராட்டத்தில் குதிக்க தீர்மானம்..

யாழ்.பருத்தித்துறை இ.போ.ச ஊழியர்கள் எதிர்வரும் 12ம் திகதி தொடக்கம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இ.போ.ச தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பு வழங்கியிருக்கின்றனர். 

நிர்வாகத்தை குழப்பும் ஊழியர்களை இடமாற்றம் செய்யவேண்டும், சாலை முகாமையாளரை சாலையில் கடமையாற்ற விடவேண்டும், உதவி முகாமையாளரை எந்தவித அழுத்தமும் இன்றி கடமையாற்ற விடவேண்டும். 

கொழும்பு பகல் சேவையை பகலில் ஆரம்பிக்கவேண்டும் எரிபொருள் செலவிலும் பார்க்க குறைந்த வருமானத்தை ஈட்டும்சேவையை மட்டுப்படுத்தவேண்டும் என சில கோரிக்கைகளை இ.போ.ச தலைவரிடம் முன்வைத்துள்ளார். 

இந்த கோரிக்கைகளுக்கு 10.12.2022 க்குமுன்னர் தீர்வு காணப்படாவிட்டால் திட்டமிட்டபடி அன்றிலிருந்து வேலை நிறுத்தம் இடம்பெறுமென இலங்கை பொதுஜன போக்குவரத்து பருத்தித்துறை ஊழியர்சங்கம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு