யாழ்.கொட்டடியில் மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! இளைஞன் பலி, மற்றொரு இளைஞன் அதிதீவிர சிகிச்சை பிரிவில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொட்டடியில் மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! இளைஞன் பலி, மற்றொரு இளைஞன் அதிதீவிர சிகிச்சை பிரிவில்..

யாழ்.கொட்டடி - லைடன் சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொட்டடியைச் சேர்ந்த றொபிக்‌ஷன் (வயது-21) என்ற இளைஞரே உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்.மாநகரில் இருந்து கொட்டடி நோக்கி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவத்தில் இடத்தில் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு