யாழ்.ஊர்காவற்றுறையில் 3 லீற்றர் கசிப்புடன் கைதான பாடசாலை மாணவன் தொடர்பில் சிறுவர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறையில் 3 லீற்றர் கசிப்புடன் கைதான பாடசாலை மாணவன் தொடர்பில் சிறுவர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

யாழ்.ஊர்காவற்றுறை - ஊரி பகுதியில் கசிப்புடன் கைதான 15 வயது பாடசாலை மாணவனை அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்க யாழ்.சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

3 லீற்றர் கசிப்பு மற்றும் 16 லீற்றர் கோடாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஊர்காவற்துறை விசேட புலனாய்வு பொலிசார் ஹரிதாஸ் தலைமையிலான அணியினர் கைது செய்திருந்தனர்.

அவரை நேற்றைய தினம் யாழ்.சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு