வீடியோ அழைப்பு(call) பதிவை வைத்து மிரட்டி மாணவியை துஷ்பிரயோகம் செய்த யாழ்.ஏழாலையை சேர்ந்த இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
வீடியோ அழைப்பு(call) பதிவை வைத்து மிரட்டி மாணவியை துஷ்பிரயோகம் செய்த யாழ்.ஏழாலையை சேர்ந்த இருவர் கைது!

மாணவியுடன் தொலைபேசி வீடியோ அழைப்பில் பேசி அதனை பதிவு செய்து மிரட்டியதுடன், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் யாழ்.ஏழாலை பகுதியை சேர்ந்த 20, 25 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாணவியுடன் இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வீடியோ அழைப்பின் மூலம் உரையாடியுள்ளார். இதன்போது அந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளார். 

பின்னர் மாணவியுடனான குறித்த உரையாடல் பதிவை தனது உறவினரான இன்னொரு இளைஞருக்கும் குறித்த இளைஞர் அனுப்பியுள்ளார்.

அவ்வாறு தனது நண்பனின் மூலம் கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

மாணவி கல்வி கற்கும் பாடசாலைச் சமூகத்துக்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக பொலிஸ் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.

இதையடுத்து வீடியோ பதிவு செய்த இளைஞரும், அதனைப் பயன்படுத்தி மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு