ரஷிய படைகளிடம் இருந்து முக்கிய நகரை மீட்ட உக்ரைன் இராணுவம்!!

ஆசிரியர் - Editor II
ரஷிய படைகளிடம் இருந்து முக்கிய நகரை மீட்ட உக்ரைன் இராணுவம்!!

ரஷிய படையின் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைனின் முக்கிய நகரம் ஒன்றை உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் மீது ரஷியா ஆரம்பித்த போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றின. இந்தநிலையில் ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளது.

உக்ரைனின் கிழக்கில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் நகரை தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக ரஷியா பயன்படுத்தி வந்தது. ரஷியாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் டொனெட்ஸ்க்கும் ஒன்றாகும்.

அந்த நகரை மீட்க உக்ரைன் படையினர் தொடர்ந்து சண்டையிட்டனர். அந்த நகரை உக்ரைன் இராணுவத்தினர் சுற்றி வளைத்ததால் அங்கிருந்து ரஷிய படைகள் பின் வாங்கின. அங்குள்ள லைமனை உக்ரைன் படைமீட்டுள்ளது ரஷியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு