யாழ்.பல்கலைகழக மாணவன் மீது மதுபோதையில் வந்த வன்முறை கும்பல் தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவன் மீது மதுபோதையில் வந்த வன்முறை கும்பல் தாக்குதல்..!

யாழ்.பல்கலைகழக வீதியில் மதுபோதையில் வந்த கும்பல் மாணவர் ஒருவர் மீது போத்தலை உடைத்து தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. 

பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்று (02) சென்றுக்கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை வழி மறித்து தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு