மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் பலி!

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் பலி!

மோட்டார் சைக்கிள் வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். 

கடந்த 1ஆம் திகதி சுண்டிக்குளம் கல்லாறு பகுதியிலிருந்து 3 பேர் மோட்டார் சைக்கிளில் புளியம்போக்கணை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

புளியம்பொக்கணை பகுதியில் சென்றுக்கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் வீழ்ந்துள்ளது.இதில் படுகாயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் நேற்று (02) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் பவி ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு