யாழ்.பொலிகண்டி பகுதியில் அதிகாலையில் இராணுவம் நடத்திய சுற்றிவளைப்பில் 217 கிலோ கஞ்சா மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிகண்டி பகுதியில் அதிகாலையில் இராணுவம் நடத்திய சுற்றிவளைப்பில் 217 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்.பொலிகண்டி வாடிப் பகுதியில் இராணுவத்தினர் நடாத்திய அதிரடி சுற்றிவளைப்பின்போது சுமார் 217 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

வல்வெட்டிதுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து இ

ன்று அதிகாலை அங்கு சென்ற இராணுவத்தினர், கரையொதுங்கி வாடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் 217 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டனர்.

மீட்கபட்டவை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு