வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இயற்கை எய்தினார்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இயற்கை எய்தினார்..

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற கிராமசேவகருமான சு.பசுபதிப்பிள்ளை மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்டதில் பல்வேறு சமூக பணிகளை ஆற்றிய அவர் மக்கள் ஆதரவோடு மாகாணசபை உறுப்பினராக 5 வருடங்கள் சேவையாற்றியிருந்தார். 

மேலும் கிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயம் மற்றும் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்ட காணி போன்ற பல ஆக்கிரப்பு முயற்சிகளுக்கு எதிராக செயற்பட்டவர். 

விடுதலை போராட்ட காலத்திலும் பல்வேறு பணிகளை ஆற்றிய அவர் மாவட்ட மக்கள் மத்தியில் மதிப்புமிக்கவராக திகழ்ந்தார். 

அவருடைய இழப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தொிவித்துவருகின்றனர். அன்னாரது இழப்ப கிளிநொச்சி மண்ணுக்கு போிழப்பாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு