யாழ்.மானிப்பாயில் ஐஸ் போதைப் பொருளுடன் 15 வயது சிறுவன் உட்பட இருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாயில் ஐஸ் போதைப் பொருளுடன் 15 வயது சிறுவன் உட்பட இருவர் கைது..!

ஐஸ் போதைப் பொருளுடன் 15 வயது சிறுவன் உட்பட இருவர் மானிப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கடந்த செவ்வாய் கிழமை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மானிப்பாய் சமுர்த்தி வங்கி ஒழுங்கை பகுதியில் ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருக்கும் நபர் தொடர்பான இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்டு பொலிஸார் நடத்திய சோதனையில் 260 மில்லிக்கிராம்  ஜஸ் போதைப் பொருளுடன் 2 பேர் கைதாகினர். 

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணகளை நடத்திவருகின்றனர். சம்பவத்தில் 15 மற்றும் 25 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு