யாழ்.வல்வெட்டித்துறையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்! இளம் கணவனும், மனைவியும் தீ காயங்களுடன் சடலமாக மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்! இளம் கணவனும், மனைவியும் தீ காயங்களுடன் சடலமாக மீட்பு..

யாழ்.வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் கணவனும், மனைவியும் தீக்காயங்களுடன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளனர். 

இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக காணப்படுகின்றனர்.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு