வடமாகாண ஆளுநருக்கு எதிராக இடமாற்றம் பெற்ற மூத்த அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடியாம்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநருக்கு எதிராக இடமாற்றம் பெற்ற மூத்த அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடியாம்..!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எதிராக மூத்த நிர்வாக அதிகாரிகளான இளங்கோவன், செந்தில் நந்தனன், சிவகுமார் ஆகியோரால் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வடக்கில் கடமையாற்றிய குறித்த மூன்று நிர்வாகசேவை அதிகாரிகளையும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படையில் வடமாகாண ஆளுநர் மாகாணத்தில் இருந்து விடுவித்திருந்தார்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட மூன்று அதிகாரிகளும் ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார் என ஊடகங்களில் போர் கொடி தூக்கிய நிலையில் நீதிமன்றத்தையும் நாடியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக இருந்த இளங்கோவன் வடமாகாண விவசாய பணிப்பாளராக இருந்த சிவகுமார் மற்றும் சுகாதார அமைச்சின் வடக்கு செயலாளராக இருந்த செந்தில் நந்தனன் ஆகியோர் 

தமது பணியிட மாற்றத்தில் நிர்வாக வரம்பு மீறப்பட்டதாக பல்வேறு காரணங்களை காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு ஏற்கனவே ஒரு தடவை விசாரணைக்காக எடுக்கப்பட்டு திகதியிடப்பட்ட நிலையில் 

நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணை எடுக்கப்பட்ட நிலையில் குறித்த வழக்குத் தொடுணர்களினால் தமது இடமாற்றத்தின் நியாயப்பாடுகள் மற்றும் சட்ட வரம்பை மீறியமை தொடர்பில் 

முன்வைக்கக்கூடிய போதிய ஆதாரங்கள் இல்லாமையால் குறித்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு