சுவிஸ் நாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் கொள்ளை! யாழ்.உரும்பிராயில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சுவிஸ் நாட்டிலிருந்து வந்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் கொள்ளை! யாழ்.உரும்பிராயில் சம்பவம்..

யாழ்.உரும்பிராய் கிழக்குப் பகுதியில் நேற்று நண்பகல் வீடொன்று உடைக்கப்பட்டு 12 பவுண் நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, உரும்பிராய்கிழக்குப்பகுதியிலுள்ள வீடொன்றில் சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த குடும்பத்தினர் தங்கியிருந்துள்ளனர். 

அவர்கள் நேற்று நயினாதீவுக்கு வழிபாடுகளுக்காகச் சென்றவேளை மேற்படி வீடு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பில் கோப்பாய்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு