தீ காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் மரணம்!

ஆசிரியர் - Editor I
தீ காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் மரணம்!

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 24ஆம் திகதி சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கிங்ஸ்லி தனுசியா (வயது - 29) என்ற இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்துள்ளார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த குறித்த பெண், குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த 24ம் திகதி தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இதையடுத்து அவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனளிக்காமல் நேற்றுக் காலை அவர் உயிரிழந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு