யாழ்.போதனா வைத்தியசாலையின் ஒழுங்கமைப்பில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக நடைபவனி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையின் ஒழுங்கமைப்பில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக நடைபவனி..!

யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கையாக யாழ்.போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலை முன்றலில் இன்று (29) மதியம் 12 மணியளவில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ்.பொலிஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக சுண்டுக்குளிச் சந்தியை அடைந்து 

பழைய பூங்கா வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை அடைந்தது. இதன்போது யாழ்.மாவட்ட செயலர் க.மகேசனுக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினரால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இந்தப் பேரணியின்போது யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு