மதுபானத்திற்கு பதிலாக “ஓடிக்கொலோன்” குடித்துவந்தவர் பலி! யாழ்.நகரில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மதுபானத்திற்கு பதிலாக “ஓடிக்கொலோன்” குடித்துவந்தவர் பலி! யாழ்.நகரில் சம்பவம்..

மதுபானத்திற்குப் பதிலான ஓடிக்கொலோனை குடித்துவந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் தனிமையில் வாழ்ந்த யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்தவராவார். 

மதுபானத்தை வாங்க முடியாத காரணத்தால் குறித்த குடும்பஸ்தர் ஓடிக்கொலோனை குடித்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் இவர் யாழ்.மத்திய பேருந்து நிலையத்துக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு