யாழ்.தாவடியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி அட்டகாசம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி அட்டகாசம்!

யாழ்.தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் இரவு இனந்தொிாத நபர்கள் பெற்றோல் குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். 

குறித்த வீட்டுக்கு நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பலாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கி இந்தக் கும்பல் தீ வைத்துள்ளனர்.

அத்துடன் வீட்டில் இருந்த தளபாடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் சேதம் விளைவித்து விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் 

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு