யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் சிறுவர்கள், மாணவர்கள்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் சிறுவர்கள், மாணவர்கள்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

யாழ்.மாவட்டத்தில் ஹெரோயின் உள்ளிட்ட அபாயகரமான போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். 

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. அதில மேலும் பேசப்பட்டதாவது, 

யாழ்.மாவட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் உள்ளிட்ட அபாயகரமான போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். பலர் அதற்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். 

குறிப்பாக பெற்றோரை இழந்த பிள்ளைகள், பெற்றோரால் அதிகம் கவனிக்கப்படாத பிள்ளைகள், பெற்றோரி வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகள் அதிகம் இலக்குவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இவ்வாறான விடயங்களை கட்டுப்படுத்த பொலிஸார் துரிதகதியில் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதற்கு அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்ப மிகவும் அவசியமானதாகும். 

மேலும் தனியார் கல்வி நிலையங்களில் கற்றல், கற்பித்தல் வட்டத்திற்கு வெளியே எந்தவொரு தொடர்புமற்ற நபர்களுடைய நடமாட்டம் அதிகம் காணப்பட்டுள்ளது. அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறினர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு