தாய்ப்பால் புரையேறிய நிலையில் 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்! யாழ்.வடமராட்சி கிழக்கில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தாய்ப்பால் புரையேறிய நிலையில் 10 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்! யாழ்.வடமராட்சி கிழக்கில் சம்பவம்..

யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் பால்புரையேறியதில் 10 மாத சிசு உயிரிழந்துள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. பால் கொடுக்கப்பட்ட போது புரையேறி குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த குழந்தையை அம்பன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் மரண விசாரணையை பருத்தித்துறை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா மேற்கொள்ளவுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு