யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் சிக்கியது!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கும்பல் சிக்கியது!

யாழ்.அச்சுவேலி, சிறுப்பிட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பெயரில் அச்சுவேலி பொலிஸாரினால் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்ட்டுள்ளதுடன், 

பொருளாதார நெருக்கடி காரணமாக இவர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.க டந்த காலங்களில் பெட்ரோல் தட்டுப்பாடான நேரம் 

இவர்கள் திருச்சக்கர வண்டிகளை திருடி அதனை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதன்போது விற்பனை செய்யப்பட்ட இடங்களில் இருந்து 11 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் தொலைக்காட்சி பெட்டி இலத்திரையின் உபகரணங்கள், கேஸ் சிலிண்டர் என்பனவும் கைபெற்றப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு