பாடசாலையில் செயன்முறை பரீட்சைக்கு சென்றிருந்த 17 வயது சிறுமியை காணவில்லை! யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
பாடசாலையில் செயன்முறை பரீட்சைக்கு சென்றிருந்த 17 வயது சிறுமியை காணவில்லை! யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

யாழ்.வட்டுக்கோட்டையை சேர்ந்த 17 வயதான சிறுமி ஒருவர் பாடசாலை செயன்முறை பரீட்சைக்காக சென்றிருந்த நிலையில் காணாமல்போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச்சேர்ந்த மதிவதணன் லக்சாயினி வயது 17 எனும் சிறுமி காணாமல்போயுள்ளர்.

நாடகமும் அரங்கியலும் செயன்முறை பரீட்சைக்காக பாடசாலை சென்ற நிலையில் கடந்த புதன்கிழமை இருந்து வீடு திரும்பவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .

மேலதிக விசாரணைகளை வட்டு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு